மீண்டும் மாலைதீவுக்கு ஜனாதிபதியானர் முகமது நஷீத்!!

573

mal

இந்திய பெருங்கடல் நாடான மாலைதீவில் மமூன் அப்துல் கயூம் 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2008ம் ஆண்டு பல கட்சிகள் பங்கேற்ற முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது.

அதில் மாலைதீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்றார். ஆனால் 4 ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடித்த அவர், இராணுவ புரட்சி காரணமாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பதவி விலகினார். துணை ஜனாதிபதியாக இருந்த முகமது வகீத் ஜனாதிபதியானர்.

இந்நிலையில் 2வது ஜனநாயக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், தற்போதைய ஜனாதிபதி முகமது வகீத், முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், முன்னாள் ஜனாதிபதி கயூமின் சகோதரரும் மாலைதீவு முற்போக்கு கட்சி வேட்பாளருமான அப்துல்லா யாமீன், ஜமூரி கட்சி வேட்பாளர் காசிம் இப்ராகிம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மாலைதீவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ஆயிரம் ஆகும். 192 தீவுகள், 40 ரிசட்டுகள் ஆகியவற்றில் 470 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

காலை 7.30 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
ஜனாதிபதி முகமது வகீத் ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தார். வரிசையில் நிற்க சொன்னதால் அவருடைய மனைவி வாக்களிக்கவில்லை.

பிறகு நிருபர்களிடம் பேசிய முகமது வகீத் தேர்தல் முடிவுகளை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இத்தேர்தலில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

2 ஆயிரத்து 229 உள்ளூர் பார்வையாளர்களும், 102 சர்வதேச பார்வையாளர்களும், ஆயிரத்து 342 அரசியல் கட்சி பிரதிநிதிகளும், சுமார் 2 ஆயிரம் உள்ளூர், சர்வதேச பத்திரிகையாளர்களும் இந்த தேர்தலை கண்காணித்தனர்.

அத்துடன் இந்திய உயர்மட்ட குழுவும் தேர்தல் பணிகளை பார்வையிட்டது. இக்குழுவில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் ஜே.எம்.லிங்டோ,பி.பி.டாண்டன், என்.கோபாலசாமி, மாலைதீவுக்கான முன்னாள் இந்திய தூதர் எஸ்.எம்.கவாய் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

மேலும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் குழுவும் மாலைதீவு தேர்தல் ஆணையகமும் இணைந்து மென்பொருள் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை கவனித்தது.

மாலை 4 மணிக்கு முடிவடைந்த வாக்குப்பதிவில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் அதிக வாக்குகளால் பெற்று வெற்றி பெற்றார். 18 மாத இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக தேடப்பட்டபோது அவர் மாலைதீவில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.