வவுனியா இருகடைகள் தீயில் எரிந்து நாசம்!!

526

 
வவுனியா செட்டிக்குளம் பிரதான வீதி இராசேந்திரகுளத்தில் இன்று (31.10.2016) காலை 11.20 மணியளவில் திடீரென இருகடைகள் தீப்பற்றியது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா இராசேந்திரகுளத்தில் அமைந்துள்ள இரு கடைகள் (ஸ்ரூடியோ,பலசரக்கு வாணிபம்) என்பன திடீரென தீப்பற்றியுள்ளது. கடைகள் முடப்பட்டிருந்தமையினால் அயலவர்கள் கடையின் கதவினையுடைத்து தண்ணீருற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குளிரூட்டி, அச்சுப்பிரதி இயந்திரம், கணனி என பல இலத்திரனியற் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது

சேதம் பற்றிய முழுமையான விபரம் இது வரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

1 dsc_0001 dsc_0002 dsc_0004 dsc_0005 dsc_0006 dsc_0009 dsc_0010 dsc_0011 dsc_0012 dsc_0013 dsc_0014 dsc_0015 dsc_0025 dsc_0027 dsc_0028 dsc_0029