வவுனியா – வைரவப்புளியங்குளம் பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் இந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.
வவுனியாவில் நேற்று (30.10.2016) மாலை பெய்த கடும் மழை காரணமாக வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியின் ஓரத்தில் நின்ற பழமை வாய்ந்த மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக வைரவர்கோவில் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களினால் முறிந்து வீழந்த மரத்தினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.






