வவுனியாவில் நடைபெறும் மாபெரும் கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழாவும் கருத்தமர்வும்!!

949

 
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட கலாச்சார பேரவையும்,வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய கலை இலக்கிய கருத்தமர்வும் பண்பாட்டுப் பெருவிழாவும் இன்று (31.10.2016) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

31.10.2016,1.11.2016 ஆகிய இருதினங்களில் இடம்பெறும் இன் நிகழ்வில் முதலாம் நாள் நிகழ்வாக கலை இலக்கிய கருத்தமர்வு இடம்பெற்றது.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இன் நிகழ்வில் தி.திரேஸ்குமார் (மேலதிக அரசாங்க அதிபர் வவுனியா) , அ.சிவபாலசுந்தரன் ( பிரதிப் பிரதம செயலாளர்- ஆளணியும் பயிற்சியும் வடக்குமாகணம்), எம்.பி.நடராஜ் (கோட்டக்கல்வி பணிப்பாளர் வவுனியா தெற்கு), இ.வீரசிங்கம் (கோட்டக்கல்விப் பணிப்பாளர் வவுனியா தெற்கு சிங்களம்) , ச.ஜேசுதாசன் (கோட்டக்கல்விப் பணிப்பாளர்), கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாளைய அரங்கு கலாபூசணம் திருமதி தேவி மனோகரி நாகேஸ்வரன் அவர்களின் பண்பாட்டு பெருவிழா நடைபெறவுள்ளது. இன் நிகழ்வுக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்,வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

dsc_0699 dsc_0701 dsc_0702 dsc_0703 dsc_0704 dsc_0706 dsc_0709 dsc_0713 dsc_0714 dsc_0715 dsc_0720 dsc_0722 dsc_0725 dsc_0726 dsc_0727 dsc_0729 dsc_0731 dsc_0732 dsc_0733 dsc_0734 dsc_0738 dsc_0739 dsc_0742 dsc_0743 dsc_0744 dsc_0745 dsc_0748 dsc_0749 dsc_0750 dsc_0754 dsc_0755 dsc_0756 dsc_0758 dsc_0761 dsc_0766 dsc_0767 dsc_0769 dsc_0772 dsc_0773 dsc_0774 dsc_0775 dsc_0777 dsc_0780