நைஜீரியாவில் இராணுவத்தினரின் தாக்குதலில் 50 தீவிரவாதிகள் பலி!!

342

nigeria

நைஜீரியாவில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் என்ற தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு இவர்கள் போர்னோ என்ற இடத்தில் தாக்குதலில் ஈடுபட்டு 20 அப்பாவி மக்களை கொன்றனர்.

இதற்கு ஹெலிகப்டர் படையுடன் சென்று இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது.

அதில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை இராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.