யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் பாதிப்பு!!

1067

uni

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக, மாணவர்கள் நுழைவாயிலுக்கு அருகிலிருந்து விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களை உட்பிரவேசிக்கவிடாது தடைபோடப்பட்டுள்ளமையால் பல்கலைக்கழக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு உயிரிழந்த மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், நிர்வாகத்திடம் கோரிக்கையை முன்வைத்திருந்தது.

மேலும் இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாபதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறும் மாணவர்கள் கோரியிருந்தனர்.

எனினும் கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்படவில்லை என்பதால் மாணவர்கள் நுழைவாயிலை மூடி இன்று (31) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காராணமாக சுமார் 1500 கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் நுழைவாயிலுக்கு வெளியில் காத்திருந்தனர்.

இதேவேளை, இன்றைய தினம் இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் யாழ். பல்கலைக்கழகத்திற்கு வருகைத் தந்திருந்தார்.

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,யாழ். பல்கலை துணைவேந்தர் உட்பட பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

எவ்வாறாயினும் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஊடகவியலாளருக்கு செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.