அவுஸ்திரேலிய தேர்தல் : டோனி அபோட் அபார வெற்றி!!

591

aus

அவுஸ்திரேலியாவில் நேற்று நடந்த பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் வேட்பாளரான டோனி அபோட் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் ஆறு வருடங்கள் ஆட்சியில் இருந்த தொழிற்சங்கக் கட்சியினை மக்கள் இந்தத் தேர்தலில் முற்றிலும் ஒதுக்கியுள்ளனர். சென்ற முறை நடந்த தேர்தலில் தங்களுக்கு கிடைத்த ஆதரவினை பெருக்கிக் கொள்ளாமல் கொந்தளிப்பான ஆட்சியை அளித்த தொழிற்சங்க கட்சியினை இத்தேர்தலில் மக்கள் பழி வாங்கியுள்ளனர்.

ரோட்ஸ் தீவின் அறிஞரும்,பயிற்சி மதகுருவும் மற்றும் முன்னாள் குத்துச்சண்டை வீரருமான அபோட் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்துவதாக வாக்களித்துள்ளார்.

வரிகளைக் குறைப்பதாகவும், அவுஸ்திரேலியாவிற்குத் தஞ்சம் தேடி படகு மூலம் வரும் மக்கள் எண்ணிக்கையைக் குறைப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஆட்சிக்கு வந்த ஜூலியா கில்லார்டை எதிர்த்து கெவின் ருத் இறக்கப்பட்டார். ஆயினும்,இந்த வருடம் ஜூன் மாதம்தான் அவரால் ஜூலியாவை உட்கட்சி தேர்தலில் வீழ்த்தி பதவிக்கு வரமுடிந்தது.

ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதற்காக நடைபெற்ற கட்சிப் பூசலில் தொழிற்சங்கக் கட்சி எதிரணியிடம் தோற்றுள்ளது என்று அக்கட்சியின் முன்னாள் பிரதமரான பாப் ஹாக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.