வவுனியாவில் கடும் மழை : வியாபார நிலையங்களுக்குள் வெள்ளம்!!

893

 
வவுனியாவில் இன்று(31.10.2016) பிற்பகல் 2 மணியளவில் பெய்த கடும் மழை காரணமாக வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் மழை நீர் சென்றுள்ளதால் வியாபார நடவடிக்கைகள் மேற்மெற்கொள்ள முடியாதுள்ளதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வியாபார நிலைய கட்டிடத் தொகுதியானது வவுனியா நகர சபை நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியாகும்.


தற்போது பருவ மழை ஆரம்பித்துள்ளதால் மேலும் பல அசௌகரியங்களுக்கு வியாபார நிலைய உரிமையாளர்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இன்று பெய்த கடும் மழை காரணமாக சில வியாபார நிலையத்தின் கூரைத்தகடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் வியாபார நிலையத்திற்கு பொருத்தப்பட்ட சீலிங் கூரைத்தகடுகளும் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் மின் இணைப்பு வயர்களும, மின் குமிழ்களுக்கு செல்லும் வயர்கள் அறுந்து காணப்படுகின்றன.


இவ் விடயம் தொடர்பாக நகரசபை பிரதம முகாமைத்துவ உதவியாளரை கேட்டபோது தனக்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லையெனவும் இதற்குரிய  தீர்வினை உடனடியாக மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

1 dsc_0791 dsc_0792 dsc_0793 dsc_0794 dsc_0795 dsc_0796 dsc_0797 dsc_0798 dsc_0799 dsc_0800 dsc_0806 dsc_0807 dsc_0810 dsc_0813 dsc_0814 dsc_0816 dsc_0820 dsc_0821 dsc_0822 dsc_0823 dsc_0827 dsc_0828 dsc_0830 dsc_0831 dsc_0832 dsc_0833