நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உறவுக்கார சகோதரர்கள் 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க இவ்வாறு மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
2001ஆம் ஆண்டு மருதானை சங்கராஜ மாவத்தை பிரதேசத்தல் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் 5 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தில் 05 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்தவழக்கில் 05 நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிபதி பத்மினி என். ரணவக்க உத்தரவிட்டுள்ளார்.






