வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் துர்முகி வருட கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை ஆரம்பமானது.
விரதமிருக்கின்ற அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில் வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான் வீதியுலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது.
மேற்படி விரத உற்சவத்தில் எதிர்வரும் 05.11.2016 சனிக்கிழமை சூரன் போர் இடம்பெறும்.
படங்கள்,வீடியோ: கஜன் என்கிற தம்பி