வவுனியாவில் நேற்று (31.10.2016) இரவு 9.30 மணியளவில் வவுனியா பொலிஸாரினால் கேரளா கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்று இரவு வழமையான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை நிறுத்தி சோதனையிட்ட போதே சுமார் 51 கிலோ 600கிராம் கேரள கஞ்சா பிடிபட்டுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இக் கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.