திரைப்பட இயக்குநரும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான காளிமுத்துவின் இளையமகள் கயல் விழிக்கும் இன்று காலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. ஏ மைதானத்தில் பழ.நெருமாறன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க தாலி கட்டினார் சீமான்.
அரசியல், திரைப்பட பிரபலங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இத்திருமணம் விழாவில் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.