வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சாரபேரவை வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்தும் பண்னிசைப்பெருவிழா மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நேற்று முன்தினம் ஆரம்பமானது.
நிகழ்வுகளின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று (01.11.2016) பிற்பகல் 2 மணியளவில் வவுனியா நகரசபைக்கு முன்பாக ஆரம்பமாகி அதிதிகள் அழைத்துவரப்பட்டு கலாச்சார மண்டபத்தில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோஹன புஸ்பகுமார தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் வட மாகாண சபை உறுப்பினர்களான ம. தியாகராசா, ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ஜெயதிலக, வவுனியா மாவட்ட மேலதிக செயலாளர் T.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலளர் கா.உதயராசா, மற்றும் அரச அதிகாரிகள், சமயத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ் சிங்கள கலாச்சார நிகழ்களுக்கு அமைவாக இடம்பெற்ற நிகழ்வில் கலை நிகழ்வுகள், கலை கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் கலைஞர்கள் கௌரவிப்பு குழுநடனம், கரகாட்டம், வீணை இசை, கிராமிய நடனம், கண்டிய நடனம். ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.