வவுனியாவில் இன்று (02.11.2016) பிற்பகல் 1 மணியளவில் வைத்தியர் விடுதியில் இருந்து ஊர்வலமாக சென்ற வைத்தியர்கள் ஹொறவப்பொத்தான வழியாக, பசார் வீதி சென்று, மணிக்கூட்டுக்கோபுரம் வழியாக மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு ஊடாக புட்சிட்டிக்கு முன்பாக இருந்து தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வடக்கு வைத்தியர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இவ் எதிர்ப்பு நடவடிக்கையின்போது அவசர சிகிச்சைப்பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, விடுதி செயற்பாடுகளுக்கு இடையூறு இன்றி தமது எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்த இவ் எதிர்ப்பு நடவடிக்கை பிற்பகல் 2 மணியுடன் நிறைவு பெற்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு. வவுனியா மாவட்டங்களைச் சேந்த வைத்தியர்கள் கலந்து கொண்ட இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் வைத்தியர்கள் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிரான நோயாளர்கள் உயிர் ஆபத்தில் , சைட்டமை இரத்துச்செய், இலவச கல்வி சுகாதார சேவை ஆபத்தில் என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு சென்றனர்.