சூரியவெவ-பெத்தேவெவ பிரதேசத்தில் தோடம்பழ விதை தொண்டையில் சிக்குண்டு 11 மாத குழந்தை நேற்று (01) உயிரிழந்துள்ளது.
குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது ஏதோ ஒரு பொருள் தொண்டையில் சிக்குண்ட நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தையின் தொண்டையில் தோடம்பழ விதை சிக்குண்டிருந்தமை பின்னரே தெரியவந்துள்ளது.
இருப்பினும் மருத்துவர்களால் அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.