நீச்சல் குளத்தில் இளம் தம்பதியரை தாக்கிய முதலை : தப்பியோடிய கணவன்!!(வீடியோ)

534

cro

கடந்த வாரம் சிம்பாப்வே நாட்டைச்சேர்ந்த இளம் தம்பதியர், கார்பியா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த நீச்சல் குளத்திற்குள் முதலை ஒன்று புகுந்தது. குளத்திற்குள் திடீரென முதலையைக் கண்ட கணவர் அலறியடித்து கரையேறிவிட, மனைவி தனியாக அந்த முதலையிடம் மாட்டிக்கொண்டார்.

ஒருவழியாக தனது காலைக் கவ்வ வந்த முதலையிடமிருந்து அந்த பெண்ணும் தப்பிவிடுகிறார். நீச்சல் குளத்தின் அருகாமையில் உள்ள சிசிடிவி கமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளை அந்த ஆண் யூ-டியூப்பில் பகிர, இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

முதலையிடம் இருந்து தனது மனைவியைக் காப்பாற்ற முயற்சிக்காமல் தப்பிய கணவரின் செயலை பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.