கடந்த 13 வருடங்களாக கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த கௌதமி, அவரை விட்டு பிரிந்துவிட்டதாக நேற்று அறிக்கை வெளியிட்டார்.
தனது மகளின் எதிர்காலம் கருதியே இந்த முடிவினை எடுத்துள்ளேன் என அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இதுகுறித்து கமல் கூறியதாவது, நான் அறிக்கை வெளியிடும் மனநிலையில் இல்லை என கூறியுள்ளார்.
தொடர்ந்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது, நான் எப்போதும் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட விரும்ப மாட்டேன். என்னை பொருத்தவரை எனது பெற்றோர், சகோதரி ஆகிய குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துவதும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில்தான் விருப்பம் என்று கூறியுள்ளார்.






