முல்லைத்தீவு புதுகுடியிருப்பு இரணைபாலை பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
51 வயதான ஒருவரின் சடலமே இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.