வவுனியா பழையவாடி வீதி புளியங்குளம் பகுதியில் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று (03.11.2016) அதிகாலை 1 மணியளவில் வீடொன்றில் இரண்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென வீட்டிற்குள் புகுந்து வீட்டிலிருந்தவர்களின் கழுத்தில் கத்திவைத்து மிரட்டி கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 10 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.














