நேற்று வவுனியா ஓமந்தை புதிய வேலன்சின்னக்குளம் பகுதியிலில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மூன்று வயது மகன் ஆகியோரின் சடலங்கள் இன்று (03.11.2016) காலை அப்பகுதியிலுள்ள கிணற்றுக்குள் இருந்து மீட்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர்கள் வவுனியா புதியவேலர் சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான நாகேந்திரன் சுகந்தினி என்ற இளம் தாயும் இவரது இரண்டரை வயது மகனுமாகவும்.
இரண்டு நுண்நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடனினை செலுத்த முடியாமல் இத் தற்கொலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் இரண்டு நுண்நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தினை அடுத்து நேற்று முன்தினம் (01.11.2016) செவ்வாய்க்கிழமை ஒரு நிறுவனத்திற்கு கடன் செலுத்தவேண்டியிருந்துள்ளது. எனினும் புதன்கிழமை கடனைச் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இவரின் கணவர் மேசன் தொழிலினை மேற்கொண்டு வருகின்றார். கடந்த இரண்டு தினங்களாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரும் குடும்பத்தில் கடன் செலுத்துவதில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் குறித்த பெண் கிணற்றிற்குள் குதித்து தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அதன் பின்னர் உறவினர்கள் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர்.
அதனையடுத்தே குறித்த பெண்ணைக் காணவில்லை என்று இன்று (03.11.2016) குறித்த கிணற்றுக்குள் சென்று பார்த்தபோது கிணற்றிக்கு வெளியே அவர் அணிந்த செருப்பினை அவதானித்துள்ளதுடன், கிணற்றுக்குள் நாகேந்திரன் கிந்துஷன் (இரண்டரை வயது) , நாகேந்திரன் சுகந்தினி (வயது 23) ஆகிய தாய், மகன் சடலமாக மிதப்பதை அவதானித்து உடனடியாக கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி சடலத்தினை பார்வையிட்டதுடன், சடலம் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் தாயும் 3 வயது மகனும் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை!!(அதிர்ச்சிப் படங்கள்)





















