வவுனியாவில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!

509

 
வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிங்கள பாடசாலைகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (03.11.2016) வவுனியா தெற்கு வலய கல்வி திணைக்களகத்திற்கு முன்னால் பொதுமக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வவுனியா தேசியக் கல்வியல் கல்லூரியில் சிங்கள மாணவர்களின் புதிய கற்கை நெறியினை உடனடியாக ஆரம்பிக்கவும், சிங்கள மாணவர்களின் ஆரம்ப கல்வி செயற்பாடுகள் வேற்றுத்தாயின் பிள்ளைகள் போல் பாரா முகமாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் கல்வி அமைச்சர் அவர்களே புதிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கியது ஏன்? புதிதாக வரும் ஆசிரியர்களுக்கு அரசியல் மூலம் இடமாற்றம் வழங்கியது யார்? போன்ற பதாதைகளை தாங்கிய வண்ணம் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

dsc_0102 dsc_0103 dsc_0105 dsc_0106 dsc_0108 dsc_0113 dsc_0114 dsc_0115 dsc_0118 dsc_0119 dsc_0124 dsc_0125 dsc_0126 dsc_0128 dsc_0129 dsc_0130 dsc_0133 dsc_0134 dsc_0135 1 dsc_0099 dsc_0100