தோற்றுவிட்டேன், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்!!

622

09/12/2011 - CHENNAI: Actor Karthik Kumar and singer Suchithra at a function in Chennai - Deccan Chronicle Photo. [Tamil Nadu, Entertainment, Kollywood, Kartik, Suchitra]

தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல இளைஞர்கள் உள்ளே வருகின்றனர். அதில் சிலரால் மட்டுமே திரையில் ஜொலிக்க முடிகிறது.

அந்தவகையில் அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக் குமார். பின்னர் இவர் கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி, பசங்க 2 உள்ளிட்ட பல படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் தற்போது இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என அதிரடி அறிக்கை விட்டுள்ளார்.

இதில் 19 திரைப்படங்களில் நடித்துள்ளேன். இனி நடிப்பதை நிறுத்தப்போகிறேன். கதாநாயகனாக, நகைச்சுவையாளனாக, இரண்டாவது நாயகனாக, எதிர்மறை நாயகனாக, கௌரவ வேடம், உறுதுணை கதாபாத்திரம் என நடித்துள்ளேன்.

ஆனால் என்னால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை, தோற்றுவிட்டேன் என கூறியுள்ளார்.

இவர் பிரபல பாடகி சுஜித்ராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.