கணவன் கண்­முன்னே 8 பேர் கொண்ட கும்­பலால் பெண் பாலியல் வல்­லுறவு!!

418

abuse

வாட­கைக்கு வீடு தேடிச் சென்ற பெண்ணின் கண­வரின் கை, கால்­களை கட்­டிப்­போட்டு 8 பேர் கொண்ட கும்­பலால் பெண் பாலியல் வல்­லு­ற­வுக்­குள்­ளான சம்­ப­வ­மொன்று மும்பையில் இடம்­பெற்­றுள்­ளது. இத­னி­டையே குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய எட்டு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மும்பை ஜோகேஷ்­வரி கிழக்கு, அம்­போ­லியில் குடிசைப் பகு­தியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கணவர், மாமனார், மாமியார் மற்றும் இரு மகன்­க­ளுடன் வசித்து வரு­கிறார். தற்­போது அவர்கள் வசித்து வந்த குடிசை வீட்டின் வாடகை ஒப்­பந்தம் முடிய உள்­ளதையடுத்து அந்த பெண் தனது கணவருடன் வேறொரு வீடு தேடிச் சென்­றுள்ளார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கணவன், மனைவி இரு­வரும் அரு­கி­லுள்ள ஷாம் நகர் குடிசை பகு­தியில் வீட்டு தர­க­ரான மூதாட்டி ஒருவரின் உத­வி­யுடன் வாடகை வீடு தேடி­யுள்­ளனர்.

இரவு வெகு­நே­ர­மாகி விட்­டதால் மூதாட்டி இரு­வ­ரையும் அங்கு காலி­யாக இருக்கும் அவ­ரது வீட்டில் தங்கிக் கொள்­ளும்­படி கூறி­யுள்ளார். இதை­ய­டுத்து தம்­பதி இரு­வரும் அந்த வீட்டில் தங்­கி­யுள்­ளனர்.

இதைக் கவ­னித்துக் கொண்­டி­ருந்த குறித்த பகு­தியைச் சேர்ந்த 8 இளை­ஞர்கள், அனை­வரும் உறங்­கிய பின்னர் அந்த வீட்டுக்குள் அத்­து­மீறி நுழைந்­துள்­ளனர். சத்தம் கேட்டு கணவர், மனைவி இரு­வரும் திடுக்­கிட்டு எழுந்­தனர். அப்­போது குறித்த இளை­ஞர்கள் இளம்­பெண்ணின் கண­வரை அடித்து உதைத்து கை, கால்­களை கட்டி போட்­டுள்­ளனர்.

பின்னர் அவர்கள் கத்­தியைக் காட்டி மிரட்டி அப்­பெண்ணை மாறி, மாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி­யுள்­ளனர். கணவர் கண்­முன்­னேயே மனை­வியை 8 பேரும் அதி­காலை 2 மணிவரை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளனர். பின்னர் அவர்கள் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ளனர்.

இந்த சம்­பவம் குறித்து அறிந்த அம்­போலி பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு விரைந்து சென்று மயங்­கிய நிலையில் கிடந்த இளம்­பெண்ணை மீட்டு சிகிச்­சைக்­காக அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் சேர்த்தனர். மேலும் கண­வரின் கை, கால் கட்­டு­களை அவிழ்த்­துள்­ளனர்.

மேலும் இந்த பாலியல் வல்­லு­றவு சம்­பவம் குறித்து இளம்­பெண்ணின் கணவர் மற்றும் மூதாட்டி அம்போலி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

அதன்­பேரில் பொலிஸார் வழக்­குப்­ப­திவு செய்து பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய சம்­ப­வத்தில் தொடர்­பு­டைய 7 இளை­ஞர்­களை அதி­காலை 5 மணி­ய­ளவில் அதி­ர­டி­யாக கைது செய்­தனர். தலைமறை­வான எட்­டா­வது நபர் நேற்று முன்­தினம் காலை 11 மணிக்கு பொலி­ஸா­ரிடம் சிக்­கி­யுள்ளார்.

கைதான 8 பேரும் 22 முதல் 25 வய­திற்­குட்­பட்­ட­வர்களாவர். பின் னர் அவர்கள் அனை­வரும் நீதி­மன்றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு எதிர்­வரும் 4 ஆம் திகதி வரை பொலிஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.

8 பேர் கொண்ட கும்­பலால் இளம்பெண் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட இந்த சம்­பவம் மும்­பையில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த சம்­ப­வத்தில் கைதாகியுள்ள இளை­ஞர்­களின் பெற்றோர். சம்பவத்தில் தங்களது மகன்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.