டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் சில வகை கையடக்க தொலைபேசிகளுக்கு வட்ஸ்அப் சேவை கிடைக்காது என வட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதற்கமைய,சிம்பியன் ஒப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட தொலைபேசிகள், பிளக்பெரி ஓ எஸ் மற்றும் பிளக்பெரி 10,நோக்கியா எஸ் 40,நோக்கியா எஸ் 60, அன்டிரொய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2,வின்டோஸ் போன் 7.1, அப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ஆகிய தொலைபேசிகளில் தான் வட்ஸ்அப் சேவை டிசம்பர் 31க்கு பிறகு கிடைக்காது.
இந்த வகை தொலைபேசிகள் எங்களுக்கு முக்கியம் என்றாலும், எதிர்கால சேவைக்கு இந்த வகை தொலைபேசிகளில் தொழில்நுட்ப வசதியில்லை.
அதனால் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. எனவே, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ள வேறு தொலைபேசி வகையிற்கு மாறுங்கள்.
அப்போதுதான் இந்த சேவையை தொடர்ந்து பெற முடியும்” என்று தனது இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.