வவுனியா நகரசபைக்கு புதிய செயலாளராக இராசையா தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதேச சபையின் செயலளாராக கடமையாற்றிய இவர் நேற்று(03.11.2016) வவுனியா நகரசபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னர் வவுனியா நகரசபைச் செயலாளராக கடமையாற்றிய ரி.தர்மேந்திரா யாழ் உள்ளூராட்சி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து காணப்பட்ட நகரசபை செயலாளர் வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகரசபையில் பல்வேறு எதிர்பார்ப்புகளின் மத்தியில் மக்கள் காணப்படும் நிலையில் புதிய செயலாளராக இராசையா தயாபாரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






