அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் : அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!!

339

harin-fernando

தனது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்ற முடியாமல் போனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது அரசியலில் இருந்து ஒதுங்கிவிடப் போவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அடைந்த வெற்றிதான்.

அந்த வெற்றியை எனது கட்சிக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு நான் கடும் பாடுபட்டேன். அடுத்து வந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த வெற்றி மேலும் விஸ்தீரமானது.

என் மீது அதிக நம்பிக்கை வைத்து – நான் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டுதான் அந்த மக்கள் என்னையும் எனது கட்சியையும் வெற்றிபெறச் செய்தார்கள்.

அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நான் எப்பாடுபட்டேனும் நிறைவேற்றுவேன். மூன்று வருடங்களுக்குள் அந்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியாமல் போனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன் என்றார்.