ஈழத்து அகதிகளுக்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்!!

732

indian

இந்திய குடியுரிமை சட்டத்தின் கீழ் ஈழத்து அகதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், ஈழத்து அகதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் பிரவேசித்துள்ள அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையிலிருந்து அகதிகளாக தஞ்சடைந்து நீண்ட நாட்களாக இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த செயற்பாடானது மிகவும் பாரிய பாரபட்சமான ஒன்று என அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.