இலங்கை கடற்படையின் மருத்துவப் பிரிவில் பணியாற்றி வந்த சிப்பாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பலியாகியுள்ளார்.
இன்று காலை 5.30 அளவில் நடந்த இந்த சம்பவத்தில் பாணம, சாஸ்தரவேல கடற்படை முகாமில் சேவையாற்றி சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காலை கடன்களை முடிப்பதற்காக சென்றுக்கொண்டிருந்த போது, இவர் காட்டு யானைக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 42 வயதான பியசேனகே சந்திரசேன ரணவீர என்ற சிப்பாயே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.