வவுனியா வைத்தியசாலையில் தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு!!

316

vavuniya_hospital

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று(05.11.2016) காலை நிலுக்கா வீரசிங்கம் என்ற 32 வயது தாயும் சேயும் உயரிழந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணிற்கு இன்று காலை சுகப்பிரவசத்தில் குழந்தை பிறந்ததாகவும், அதன் பின்னர் அதிக குருதிப்பெருக்கு காரணமாக அவசரசிகிக்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டதன் பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ் விடயம் தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டபோது, இந்த வருடத்தில் இவ்வாறான சம்பவம் முதற்தடவையாக இடம்பெற்றுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரனை முடிவடைந்த பின்னர் கருத்து தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்

இவருக்கு நான்குவயது பெண் குழந்தையோன்று இருப்பது குறிப்பிடத்தக்கது