பன்னல – மல்லவத்தை – போபிடிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடும் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் பலியானவர் மல்லவத்தை – போபிடிய பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பன்னல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






