சுவிஸ்லாந்தில் 12 வயது சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சூரிச் நகரை சேர்ந்த செலின் என்ற 12 வயது சிறுமி கடத்தப்பட்டார். இச்சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, காணாமல் போன சிறுமி மூன்று நாட்களுக்கு பிறது Uster பகுதியில் வைத்து இளைஞர் ஒருவருடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
தற்போது, உடனிருந்த இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். அவருக்கு எதிராக குழந்தை பாலியல் நடவடிக்கைகளுக்கான விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்க வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுமி பத்திரமாக கிடைத்ததின் மூலம் தான் நிம்மதியடைந்துள்ளதாக சிறுமியின் தாய் கூறியுள்ளார். மேலும், சிறுமி பாதுகாப்பாக, பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டதை பொலிசாரும் உறுதி செய்துள்ளனர்.