வவுனியாவில் எறிகணைகள் மீட்பு!!

228

 
வவுனியா ஓயார் சின்னக்குளத்தில் இன்று (08.11.2016) காலை 10.00 மணியளவில் நான்கு எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஓயார்சின்னக்குளம் நான்காம் ஒழுங்கையில் இன்று (08.11.2016) காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்த போது நான்கு எறிகணைகளைக் கண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக கிராம அபிவிருத்தி சங்க தலைவருக்கு அறிவித்தமையினையடுத்து கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் எறிகணைகளை செயழிலப்பதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் இக் காணியில் இருந்ததாகவும் அவர்கள் காணியினை விட்டு வெளியேறிய பின்னரே காணி உரிமையாளர் காணியினை சுத்தம் செய்யும் போது இவ் எறிகணைகளைக் கண்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

1 20161108_124115 20161108_124116 20161108_161152 20161108_161323 20161108_161413 20161108_1614400 20161108_161543 20161108_1626570 20161108_162852 20161108_162925 20161108_162931 20161108_165503 20161108_165540 20161108_170510 20161108_170520