கதவை அடைத்துக் கதறி அழுதேன் : கமலின் சோகமான பிறந்தநாள் அனுபவம்!!

303

kamal

உடல்நலக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.

இருப்பினும், சமூகவலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்நிலையில், மாடிப்படியில் இருந்து தவறி வீழ்ந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான நேரங்களில் தாம் உறக்கத்திலும் மயக்கத்திலும் இருப்பதாக கமல் நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார்.

இதேநாளில் பிறந்தநாள் கொண்டாடும் சினிமாத்துறையைச் சாராத தமது நண்பர்களுடன் எப்போதும் ஒன்றாக இருக்கும் தாம், இம்முறை அதிக வலி காரணமாக அதற்கும் மறுப்புத் தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதுதான் உங்களுடைய சோகமான பிறந்தநாளா என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

இல்லை, 16 ஆவது பிறந்தநாள் தான் எனக்கு மிகவும் கடினமானது. அப்போது எந்த ஒரு இலட்சியமும் இல்லாமல் இருந்தேன். எத்திசையில் செல்லவேண்டும் என்று தெரியாது. எதற்காக வாழ்கிறேன் என்றும் தெரியாது. என் அப்பா என்னை அழைத்து நன்கு கண்டித்தார். ஓர் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டு கதறி அழுதேன். என் பிறந்தநாளன்று அழுதது அப்போதுதான்.

இதுபோல இருப்பது மிகவும் கடுப்படிக்கிறது. சீக்கிரம் களத்தில் இறங்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஒரு படத்தை நான் முடிக்கவேண்டியுள்ளது. வேலைகள் உள்ளன. ஆனால், நான் வலியால் வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறேன். எனக்கு எப்போதும் தேவையாக இருப்பது – வேலையும் திரும்பிவருவதற்காக வீட்டில் ஒருவரும்,
என்றார்.