தாயைத் தாக்கிய தந்தை தொடர்பில் பாடசாலை சீருடையில் சென்று பொலிஸில் முறையிட்ட சிறுவன்!!

513

complain

தனது தாய்க்கு தந்தை தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்­ப­தா­கவும் மற்றும் கடு­மை­யான தாக்­குதல் நடத்­து­வ­தா­கவும் தெரி­வித்து 12 வய­தான சிறுவன் ஒருவன் பாட­சாலை சீரு­டை­யு­ட­னேயே பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று முறைப்­பாடு செய்­துள்ள சம்­ப­வ­மொன்று பண்­டா­ர­கம பிர­தே­சத் தில் இடம்­பெற்­றுள்­ளது.

இதன் கார­ண­மாக தனது கல்­வியல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது என்றும் தனக்கு வீட்டில் சுதந்­தி­ர­மாக இருப்­ப­தற்கு கூட முடி­யாத நிலைமை உரு­வா­கி­யுள்­ளது என்றும், இதனால் தனது தந்­தைக்கு உரிய வகையில் எச்­ச­ரிக்­கையும் ஆலோ­ச­னை­யையும் வழங்­கு­மாறும் குறித்த சிறுவன் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளான்.

இந்­நி­லையில் இம் ­மு­றைப்­பாடு தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.