மன்னாரில் கரையொதுங்கிய 5 அடி நீளமும் 500 கிலோ நிறையும் கொண்ட கடற் பன்றி!!

822

1

மன்னார் தாழ்­வு­ப்பாடு கடற்­க­ரையில் உயி­ரி­ழந்த நிலையில் கடற்பன்றி ஒன்றின் சடலம் கரை ஒதுங்கி­ய­தாக வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள உதவிப் பணிப்­பாளர் அசோக ராஜ­பக் ஷ தெரிவித்துள்ளார்.

கடற் பன்­றி­யா­னது இலங்­கையில் பர­வ­லாகக் காண­மு­டி­யாததொரு அரிய வகை உயி­ரி­ன­மொன்று என அவர் தெரி­வித்­துள்ளார். இக்­க­டற்­பன்றி சுமார் ஐந்து அடி நீள­மா­ன­தெ­னவும் 450 – 500 கிலோ வரையான நிறையை கொண்­ட­தெ­னவும் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் கடற்­பி­ர­தே­சங்­களில் இவ்­வ­கை­யான கடற்­பன்­றிகள் மிகவும் அரி­தா­கவே காணக்கூடிய­தா­க­வுள்ள அதே­வேளை, இலங்­கை­யைச் சுற்­றி­யுள்ள கடற்­பி­ர­தே­சத்தில் இவ்­வ­கை­யான 7-8 வரை­யான கடற்­பன்­றிகள் காணப்­ப­டலாம் என அனு­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு உயி­ரி­ழந்த நிலையில் கரை­யொ­துங்­கி­யுள்ள கடற்­பன்­றியின் உடலில் பெரி­ய­ளவில் காயங்கள் காணப்­ப­டு­வ­தா­க­வும், சட்­ட­வி­ரோ­த­மாக மீன் பிடிப்­ப­தற்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த டைனமைட் வெடியில் சிக்­குண்டு இந்த உயி­ரினம் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் எனவும் வன­ ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரிகள் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர்.

‘இலங்­கையின் கடல் எல்­லைக்குள் வசிக்கும் இவ்­வ­கை­யான உயி­ரி­னங்­களின் எண்­ணிக்கை சரியாகக் கணிப்­பி­டப்­ப­ட­வில்லை. இவைகள் பெரும்­பாலும் தாவர உண்­ணி­க­ளா­கவே காணப்படுகின்­றன. அத்­துடன் இவ்­வ­கை­யான உயி­ரி­னங்கள் அரு­கி­வரும் இனத்தைச் சார்ந்தனவாகும்.

இவை மிகவும் விரை­வாக அழி­வுக்­குள்­ளா­கின்­றன. கடந்­த­கா­லங்­க­ளிலும் இதே­போன்­று, மீனவர்களின் அறி­யா­மையின் கார­ண­மாக இரு கடற்­பன்­றிகள் கொல்­லப்­பட்­டி­ருந்­தன.

இனி­வரும் காலங்­களில் தாம் இவ்வகையான அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்கென கடற்படையினருடன் இணைந்து விசேட வேலைத் திட்டமொன்று முன்னெ டுக்கப்படும்” என வனஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அசோக ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

2 3