2016 ஆம் ஆண்டு தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வவுனியா ஓமந்தை, கமநலசேவைகள் திணைக்களத்தின் பிரிவிற்குட்பட்ட விவசாயிகளின் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (08.11.2016) காலை 11.00மணியளவில் ஓமந்தை கமநல சேவைகள் திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.திலீபன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட கலநல உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார் கலந்து கொண்டு தரம் ஜந்து மாணவர்களை கௌரவிப்பு செய்து வைத்ததுடன் மாணவர்களுக்கு கமநல சேவைகள் திணைக்கள வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்ட சிறுதொகை பணத்தின் புத்தகத்தினையும் கையளிப்பு செய்துவைத்தார்.
இந்நிகழ்வில் ஓமந்தை கமநல அபிவிருத்திக்குழுத் தலைவர் ஏ.நாகராசா மற்றும் ஓமந்தை கமநல சேவைகள் திணைக்களத்தின் பணியாளர்கள், விவசாயிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.















