நேற்றைய தினம் (08.11.2016) இரவு 11.15 மணியளவில் வவுனியா புளியங்குளம் பகுதியில் இரண்டு லொறிகள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு லொறிகளில் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை புளியங்குளம் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










