வவுனியாவில் இராணுவத்தினரின் நிறத்தில் மோட்டார் வண்டி : பொலிசார் அதிரடி நடவடிக்கை!!

650

 
வவுனியாவில் இராணுவத்தினரின் நிறத்தில் மோட்டார் வண்டி : பொலிசார் அதிரடி நடவடிக்கை!!வவுனியாவில் கடந்த சில மாதங்களாக பொதுமகன் ஒருவரால் பயன்படுத்தி வந்த இராணுவத்தினரின் நிறத்தில் நிறப்பூச்சு பூசப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிசார் கைப்பற்றியள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக பொதுமகன் ஒருவரால் பயன்படுத்தி வந்த இராணுவத்தினரின் நிறத்தில் நிறப்பூச்சு பூசப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிசார் கைப்பற்றியள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பொதுமகன் ஒருவர் இரானுவத்தினரின் நிறத்திலான நிறப்பூச்சினை மோட்டார் வண்டிக்கு பூசியுள்ளதால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை வவுனியா நகரின் மத்தியில் பொலிசார் குறித்த மோட்டார் வண்டியை கைப்பற்றியுள்ளனர்.

இவ் மோட்டார் சைக்கிளை இன்றய தினம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.

20161109_172543 20161109_172544 20161109_172545 20161109_172551