உலக அழகி போட்டிகள் பாலதீவிற்கு மாற்றம்!!

759

miss world

உலக அழகி போட்டிகள் நேற்று இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் அழகிப் போட்டி நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போட்டி நடத்துபவர்களின் உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதை தொடர்ந்து ஜகர்த்தாவில் உலக அழகிப் போட்டி நடைபெறாது என அரசு அறிவித்துள்ளது. போட்டியின் தொடக்க விழா இந்துக்கள் அதிகமாக வாழும் பாலதீவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அழகி போட்டியின் இறுதி போட்டி ஜகர்த்தாவின் புற நகரில் வருகிற 28ம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.