வவுனியா மாவட்ட முதியோர் தின விழாவானது இன்று (10.11.2016) காலை 7.30 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் கந்தையா இராமச்சந்திரன் (மாவட்ட முதியோர் சங்கத்தலைவர்) தலைமையில் இடம்பெற்றது..
இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான செ.மயூரன், ம.தியாகராசா மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர்கள். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள், தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்துகளில் முதியோர் தொடர்பான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டதையடுத்து அங்கிருந்து பேரணியாக மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக புகையிரத நிலையம் ஊடாக நகரசபை பிரதான வீதியூடாக கலாச்சார மண்டபத்தினை வந்தடைந்து அங்கு சிறப்பு நிகழ்வுகள், முதியோர் கௌரவிப்பு, போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
மாவட்ட முதியோர் தின நிகழ்வினை மகிழ்வோர் மன்றம், வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம், வவுனியா மாவட்ட முதியோர் சங்கம் என்பன இணைந்து எற்பாடு செய்தனர்.