45 கோடி பெறுமதியான போதைப் பொருள் சிக்கியது!!

461

ppp

சுமார் 45 கோடி ரூபாய் பெறுமதியான 30 கிலோ கொகேன் போதைப் பொருள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. களனி – பெதியகொட பகுதியில் இருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.

சீனி கண்டெய்னரிலேயே குறித்த கொகேன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

அத்துடன் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் கொழும்புக்கு எடுத்து வரப்படுவதாக, போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கூறியுள்ளனர்.