சட்டவிரோதமாக ஐரோப்பியாவிற்குள் நுழைய முயன்ற 700 பேர் கைது!!

481

refu

ஆப்பிரிக்க மற்றும் ஆசியா நாடுகளில் இருந்து இத்தாலி வழியாக ஐரோப்பாவிற்குள் திருட்டுத்தனமாக மக்கள் குடியேறி வருகின்றனர்.
இவர்களை தடுக்க இத்தாலி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தும் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் நடவடிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இத்தாலி கடல் வழியாக 4 படகுகள் மூலம் ஐரோப்பியவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற700 பேரை கடற்படையினர் தடுத்து நிறுத்தினர்.

அவர்கள் சிரியா, எகிப்து, எரிட்டிரியா, நைஜீரியா மற்றும் கானா நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். பெரும்பாலானோர் சிரியாவை சேர்ந்த அகதிகள் என்று கூறப்படுகிறது.



மிகவும் அபாயகரமான இந்த இத்தாலி மற்றும் மோல்டா வழியாக கடல் வழியாக திறந்தவெளி படகுகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பாவிற்குள் செல்கின்றனர் என்று அஞ்சப்படுகிறது.

இதுபோன்று அத்துமீறி நுழைபவர்களுக்கு அடைக்கலம் தர ஐரோப்பிய யூனியன் நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று இத்தாலி கேட்டுக்கொண்டுள்ளது.