வவுனியாவில் நேற்று(10.11.2016) எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா தெக்கிழுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் ரவிச்சந்திரன் லில்லி வயது 37 என்ற பெண்ணே இவ்வாறு மரணமான பெண் என அறியப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் அவர்களை தொடர்பு கொண்ட போழுது,
எரிகாயங்களினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்தார். எனினும் இம்மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தமக்கு ஒருவர் மேல் சந்தேகம் இருப்பதாகவும் இறந்த பெண்ணின் மகன் தெரிவித்ததையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிசாரை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து வவுனியா வர்த்தகர் ஒருவர் மீது சந்தேகம் கொண்டுள்ளதாக இறந்த பெண்ணின் மகன் தெரிவித்ததையடுத்து வர்த்தகரை விசாரணைக்குட்படுத்தி வருவதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.