வ/புளியங்குளம் இந்துக் கல்லூரியில், ரெலோ சர்வதேச மகளிர் அணி(ஜேர்மன் கிளை) யினரின் நிதியுதவியுடன், தரம் – 09, 10 (2016) வகுப்புக்களுக்கான, கணிதம், ஆங்கிலம் மேலதிக வகுப்புக்கள் நடைபெறவுள்ளது. அதற்கான ஆரம்ப விழா இன்று (2016.11.10) கல்லூரியின் அதிபர் திரு.ச.பரமேஸ்வரநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதற்கு பிரதம விருந்தினராக, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வினோ அவர்களும், வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ மயூரன் அவர்களும், வவுனியா வடக்கு கல்வி வலய ஆங்கில பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு சத்தியநாதன் அவர்களும், வருகைதந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.
மண்டபம் நிறைந்த பெற்றோர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.