நடிகை சபர்ணா மர்மமான முறையில் மரணம் : அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!

453

sabarna

பிரபல நடிகையும் சின்னத்திரை தொகுப்பாளினியுமான சபர்ணா மரணமடைந்துள்ளார்.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவருக்கு பின்னர் சில சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தன.

அவர் மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று அவரது உடல் அழுகிய நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்கொலைக்கான முழுக்காரணம் என்னவென்று தெரியவில்லை. கோவையைச் சேர்ந்த சபர்ணா படிக்காதவன், காளை, பூஜை போன்ற படங்களில் கதாநாயகிக்கு தோழியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.