மன்னார் மடு ரயில் தண்டவாளப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதவாச்சியிலிருந்து மடு நோக்கி பயணித்த ரயிலுடன் டிப்பர் வாகனம் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளது.
விபத்தின்போது டிப்பர் வாகன சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.