இந்தியா செல்ல முயற்சித்த நபருக்கு வழியில் நேர்ந்த கதி!!

607

ap

ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை இந்தியாவிற்கு கடத்த முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெளிநாட்டு நாணயத்தாள்கள் 6.6 மில்லியன் பெறுமதியுடையது என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரஜையின் பொதியிலிருந்து அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் ஒரு இலட்சம் அபராத பணம் செலுத்தியதை அடுத்து அவரை விடுதலை செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.