வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் கதிராளி சஞ்சிகை வெளியீடும் இன்று(12.11.2016) காலை 9.30 மணிக்கு ஜயாத்துரை மண்டபத்தில் பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் திரு. திருமதி த. திரேஸ்குமார், சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு. எம்.இராதகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
மற்றும் அயல்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், பொது அமைப்புக்கள், பழைய மாணவர்கள் சங்கப்பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டதுடன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பிரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் கதிராளி சஞ்சிகையினை பாடசாலை அதிபர் வழங்க வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர், வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் ஆகியோர் பெற்றுக்கொண்டதுடன் சிறப்புப்பிரதிகளும் வழங்கப்பட்டன.


































































