வவுனியாவில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!!

508

 
வவுனியா குளுமாட்டுசந்தியில் நேற்று (14.11.2016) காலை 8.00 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றியது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா நெளுக்குளத்திலிருந்து வவுனியா நகரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எரிபொருள் ஒழுக்கு காரணமாக குளுமாட்டுச்சந்தியில் திடீரென தீப்பற்றியது.

தீப்பற்றியதை அறியாத முச்சக்கரவண்டியின் ஓட்டுனர் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தார். மக்கள் முச்சக்கரவண்டி தீப்பற்றியுள்ளது என கூச்சலிட்டதுடன் சாரதி முச்சக்கரவண்டியிருந்து பாய்ந்துள்ளார்.

உடனே பொதுமக்கள் உதவியிடன் அருகே காணப்பட்ட குளத்தில் முச்சக்கரவண்டியினை தள்ளி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

1 dsc_0552 dsc_0553 dsc_0555 dsc_0556 dsc_0557 dsc_0562