ட்ரம்ப் தோல்வியடைவார் எனக் கூறிய பேராசிரியர் : பந்தயத்தை நிறைவேற்றுவதற்காக வண்டை உட்கொண்டார்!!

360

sam-wang-bug_cnn

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்­வி­யு­றுவார் என பந்­த­யம் ­பி­டித்த பேரா­சி­ரியர் ஒருவர், வண்டு ஒன்றை உட்­கொண்­டுள்ளார்.

நியூ ஜேர்ஸி மாநி­லத்­தி­லுள்ள பிரின்ஸ்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பேரா­சி­ரி­ய­ராக பணி­யாற்­றுபவர் கலா­நிதி சாம் வாங். இவர் ஒரு நரம்­பியல் விஞ்­ஞா­னி­யாவார்.

இம்­ முறை அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் நாடா­ளு­மன்றத் தேர்தல் பெறு­பே­றுகள் தொடர்பாக தனது இணை­யத்­த­ளத்தில் நுட்­ப­மான ஆய்­வு­களை அவர் வெளி­யிட்­டி­ருந்தார்.

குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்­வி­ய­டைவார் என்றே அவரும் கணித்­தி­ருந்தார். அமெ­ரிக்க ஜனா­திபத் தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்கு 270 தேர்தல் கல்­லூரி வாக்­குகள் தேவை.

இந்­நி­லையில், டொனால்ட் ட்ரம்ப் 240 தேர்தல் கல்­லூரி வாக்­கு­க­ளை ­விட அதி­க­மான வாக்­கு­களைப் பெற்றால் தான் வண்டு ஒன்றை உட்­கொள்ளத் தயார் என சி.என்.என். தொலைக்­காட்­சியில் ஒளிபரப்பான “ஸ்மேர்­கோனிஷ்” எனும் நிகழ்ச்­சியில் பேரா­சி­ரியர் சாம் வாங் கூறினார்.

இந்­நி­லையில், 270 இற்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்று டொனால்ட் ட்ரம்ப் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­கி­யுள்­ளதால், தனது வாக்­கு­று­தியை நிறை­வேற்றும் வித­மாக வண்டு ஒன்றை பேரா­சி­ரியர் சாம் வாங் உட்­கொண்டார்.

நேற்­று­ முன்­தினம் ஒளி­ப­ரப்­பான சி.என்.என். “ஸ்மேர்­கோனிஷ்” நிகழ்ச்­சி­
யி­லேயே பேரா­சி­ரியர் சாம் வாங், வண்டை உட்­கொண்டார். அன்­றைய தினம்­வரை டொனால்ட் ட்ரம்ப் 290 தேர்தல் கல்­லூரி வாக்­கு­களைப் பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இத் ­தேர்தல் பெறு­பேற்றை கணிப்­பதில் ஏரா­ள­மான நிபு­ணர்கள் தோல்­வி­ய­டைந்­ததை அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். “இதில் ஏரா­ள­மானோர் தோல்­வி­ய­டைந்­துள்­ளனர்.

ஆனால், நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவதைப் போல் வேறு எவரும் செய்யவில்லை” எனக் கூறி வண்டை வாயில் போட்டுக் கொண்டார் பேராசிரியர் சாம் வாங்.